#ஈரவெங்காயம்
ஆஹா செம்மல்ல! என்னா ஒரு பேச்சு
என்னா ஒரு துணிவு
பெண்ணுன்னா இப்படில இருக்கனும்
இஸ்லாத்தை இழிவுபடுத்திய பெரியாரின்
முகத்திரையை கிழித்து தொங்கவிட்டார் இஸ்லாமிய பெண்!
அட்டகாச தலைப்பிட்டும்
ஆகா இஸ்லாமிய பெண்களும் இப்படியும் பேசுவார்களா என்ற
பெருமை பீற்றிக்கொள்ளும் இஸ்லாமியர்களின் கவனத்திற்கு!
பெரியார் மட்டும்தான் இஸ்லாத்தை இழிவுபடுத்தினாரா? இஸ்லாமியர்களை இழிவுபடுத்தினாரா?
அன்றைய மட்டுமல்ல இன்றைய அரசியல்வாதிகள் முற்போக்கு பிற்போக்குவாதிகள் யாருமே இஸ்லாத்தை கேவலப்படுத்தலையா?
இல்லை அவர்களோடு இந்த இஸ்லாமியர்கள்தான் கூட்டுக்கொள்கையோடு இணையலையா? இல்லை இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் இன்றளவும் மறைமுகமாகவும் நேரடியாகவும் இழிபடுத்திக்கொண்டேயிருக்கும் எந்த தலைவர்களோடும் அரசியல் லாபத்திற்காக அவர்களின் கட்சியில் இஸ்லாமியர்களென சொல்லிக்கொள்வோர் கொடிபிடிக்கலையா?கூட்டுவைக்கலையா?
பேசத்தெரியும் என்பதற்காவும் கொம்புசீவிவிட்டவர்களுக்காகவும் பேச்சு சுதந்தரமிருக்கிறது என்பதற்காகவும் எதைவேண்டுமானாலும் பேசுவதா?
இப்படியான பேச்சுகளை மேடையேற்றி குளிர்காய்வது அரசியல்வாதிகளின் யுக்தி என்பதுகூடவா தெரியாது..
அதுசரி இவ்வளவும் ஏன்
நீங்கள் சார்ந்த கட்சிகள் இஸ்லாமியத்தையும் இஸ்லாமியர்களையும் இதுவரை இழிவுபடுத்தியதில்லையா
ஒதுக்கிவைத்ததில்லையா?
அதென்ன குறியகால அரசியலில்
இஸ்லாமிய பெண்களின் ஊடுருவல் ஆதிக்கம்
இது நீங்களாக வெளிவரவில்லை. உங்களுக்கு பொறுப்பென்ற ஒரு ரொட்டிதுண்டைபோட்டு உங்களைப் போன்றவர்களை புறச்சீற்றலுக்கு இழுத்துவிடும் தந்திரம். இது உங்களை நேர்வழிப்படுத்தவல்ல.என்பதை நீங்கள் உணரும்தருணம் உங்களை நீங்கள் தொலைத்திருப்பீர்கள்.
கொஞ்சம் அறிவாற்றல்
கொஞ்சம் ஆடைதுறத்தல்
சுதந்திரமென்ற பெயரில்
பெண்ணாதிக்கத்தில்
நெஞ்சைநிமிர்த்தும் துணிவு
கொஞ்சம் பேச்சுதிறன்
இருந்தால் போதும்
முதல் மேடையே முத்திரைக்குத்தும் ஆகா இவள் அஞ்சா ஆளுமை என
அதோடு தொடரும் சில மேடை
சில மொழிதெரிந்த தற்பெருமை!
அரசியலே தெரியாட்டியும் தெரிந்ததாய் காட்டிக்கொள்ளும்
தத்துபித்து.
எல்லாவறிக்கும் மேலாக!
இஸ்லாத்தில் பெண் அடிமைத்தனைத்திலிருந்து வெளியே வந்துவிட்டேன் பாரு முக்காடிட்டு முழங்கால் கட்டிகொண்டு வீடு கணவன் பிள்ளைகள் குடும்பம் என செக்குமாடாய் சுழன்றவளுக்கு
திரை அகற்றி சந்தர்பத்தை உருவாக்கி வெளியுலகம் வரும் பாயம்மாகள் இப்படியா வந்து சீரழியனும்.
மீடியாக்கள் இணைய தளங்கள் முழுவதும் இப்போது முஸ்லீம் பெண்களின் (கேவலமான)
ஆதிக்கம்
காரணம் வெளியுலக மோகம். எப்படியோ நாமும் இந்த உலகத்தில் எதையாவது சாதிக்கனும் என்று சாக்கடைகளை சந்தனமென பூச்சிக்கொண்டு அலைகிறது. அதற்கும் ஒருபடி மேலாய் களமிறங்கியிருக்கும்
அரசியல் அரிசியில் கல்பொறுக்கும்
பாயம்மாக்களாய்!
கூத்தாடிகளின் பின்னால் ஒருகூட்டம் குள்ளநரிகளுக்கு பின்னால் ஒருகூட்டம்
மாற்றம் வேண்டுமென்று
இலக்கே இல்லாத போங்குகளின்பக்கம் ஒருகூட்டமென களமிறக்கப்பட்டுள்ளார்கள் இஸ்லாமிய பாயம்மாக்கள்..
கல்வியறிவைகொடுக்க கல்லூரிக்கு அனுப்பினால் கட்டுப்பாட்டை இழந்து கண்ணியத்தை மறந்து மொத்ததில் இஸ்லாமிய பெயர்தாங்கிகளாகி படைத்த இறைவனுக்கும் பெற்றோருக்கும் துரோகத்தை செய்து ஏதோ சாதித்துவிட்டதாய் எண்ணிக்கொண்டு தானென்ற தலைகணத்தில் தாறுமாறாய் திரியத்தொடங்கிவிட்டார்கள்.
இதை எதிர்பார்த்து காத்திருக்கும் ஓநாய் கூட்டம் அப்படியே லாவகமாய் இவர்களை அவர்கள் வலைக்குள் விழவைத்துக்கொண்டு. அவர்களை வைத்தே அவர்களின் சமூகத்தை இழிவுபடுத்த தொடங்கிவிட்டார்கள்.
இதை அறிந்தும் அறியாத மூடர்களாய் படித்தும் அறிவற்றவர்களாய் களத்தில் இறக்கிவிடப்பட அம்புகள் பாயத்தொடங்கியுள்ளது
அது அவர்களின் திசையை அடையாது
குறிதவறி அவர்களின் இலக்கையே அழிக்கும்
இப்படியாகதான் இதோ ஓர் அம்பு ஏவப்பட்டுள்ளது!
முண்டாசுக்காரனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாரதி கண்ட பெண்ணாக மேடையில் வீற்றிருக்கேன் பாரு என்ற தலைகணத்தோடு.
மேடை ஏறி குரலை உயற்றி
கத்திபேசி கைகளை ஆட்டி
எத்தன பெரிய ஆளாக இருந்தாலும் எனக்கென்ன
வயதில். ஆளுமையில்
நாடே கொண்டாடும் ஒருவரை
அவனே இவனே போடா ஈரவெங்காயம் பேனே பெருமாளே
நீயெல்லாம் ஒரு ஆளா என ஒருமையில் கீழ்தரமான
மரியாதைகளற்ற பேச்சைகேட்டு. உசுப்பேத்தி கைத்தட்டி ரசிக்கும் கொக்கரக்கோ கூட்டம்.
இதைக்கண்டு இன்னும் கொஞ்சம் பொங்கி எழுகிறது இஸ்லாமிய சொங்கை..
ஈர வெங்காயாமேயென சொல்லத்தகாத வார்த்தகைலில்
இளக்கராமாக எகத்தாளமெடுத்துப்பேசிய நீயொரு எடுப்பு!
இஸ்லாமிய தீமூட்டி அதில் உன்னை நெய்யாக்கி நாட்டையே
பற்றவைத்து குளிர்காய நினைக்கும் அவனொரு துடுப்பு!
என்னத்த கத்தினாலும்
பத்தவச்சாலும் வேகாதுடி தமிழ்நாட்டுல தீயசக்தியின் பருப்பு.
நீ சார்ந்த ஒருவரை உயர்த்திபிடிக்க மற்றவர்களை தாழ்த்திபேசும் கூட்டம் இன்னும் தாழ்ந்தேதான் கிடக்கும். கத்திக்கொண்டே காலத்தை ஓட்டவேண்டியதுதான்.
தூற்றுவோர் தூற்றிக்கொண்டு அங்கேயே நில்லுங்கள்
தூற்றுதலையும் போற்றுதலாய் ஏற்று முடிசூடிகொள்வார்கள் மதியுள்ள
மன்னர்கள்..
ஈரவெங்காயம் யாருன்னு
போகப்போக தெரியும்
பேனும் ஈரும் புழுத்தபின்பு தானே புரியும்..
#வேதனைகுறிப்பு
இன்னவரை இந்தநாட்டில்
வலுவான பெரும்பான்மையான
ஒரு இஸ்லாமிய கட்சியை வழிநடத்திச்செல்ல இஸ்லாமியர்களாலேயே முடியாமைக்கு காரணம்?
ஒற்றுமையற்ற சமூகமாய் பலபிரிவுகளில்!
பலரின் கைகூலிகளாகி!
பல மூளைச்சலவைக்கு உட்பட்டு! சொந்த சமூகத்திற்கே இரண்டடம் செய்வோராகவும் இருப்பதால்தான்
இன்றளவும் சிறுபான்மை என்ற முத்திரையோடு,
பெரும்பான்மைக்கு முன்பு மட்டுமல்ல
பொரம்போக்குகள் முன்பும் சினிமாக்காரன் முன்பும்
எத்தனை இழிவாய் பேசினாலும் ஒதுக்கினாலும் கைகட்டி சேவகம் செய்துகொண்டு வாழ்வோராய் இருப்பதாலும்.
இஸ்லாமியர்களுகென்ற
தனித்துவ பெரும்பான்மை சிறுமைபடுத்தப்பட்டுக்கொண்டும்
அடிமைப்படுத்தப்பட்டுக் கொண்டேதான் இருக்கும்.
*மல்லியின் ஆதங்க பதிவு*

Comments
Post a Comment
Best comment is welcomed !